Search Forum
Blog Entry# 1404577
Posted: Mar 23 2015 (07:48)
No Responses Yet
No Responses Yet
300 கி.மீ., வேக வைர நாற்கர ரயில் திட்டம்: செயல்திட்டத்திற்கு பல நாடுகள் போட்டி
Advertisement
...
more...
Advertisement
...
more...
1ரயில்வேயில் முதலீடு செய்கிறது எல்.ஐ.சி.
2 அதிக நிதியை எதிர்பார்க்கும் ரயில்வே துறைக்கு வெற்றி: ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது எல்.ஐ.ச
4 ரயில்வே பிளாட் பாரம் கட்டணம் உயர்வு
5 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு: ஏப்.1-ல் அமல்
அதிகம
300 கி.மீ., வேக வைர நாற்கர ரயில் திட்டம்: செயல்திட்டத்திற்கு பல நாடுகள் போட்டி மார்ச் 23,2015
புதுடில்லி : நாட்டின் முக்கிய நகரங்களை இணைத்து, உருவாக்கப்பட திட்டமிட்டுள்ள, வைர நாற்கர ரயில் பாதை செயல்திட்டத்தை வடிவமைக்க, பல நாடுகள் முன்வந்துள்ளன.
மும்பை - சென்னை, டில்லி - மும்பை, டில்லி - கோல்கட்டா இடையே அதிவேக, 'புல்லட்' ரயில்களை இயக்குவது தான், புதிய, வைர நாற்கர ரயில் பாதை திட்டத்தின் நோக்கம். இந்தப் பணியை செய்து முடிக்க, இப்போதுள்ள நிலையில், குறைந்தபட்சம், இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கான நிதி ஆதாரங்களை திரட்ட, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான, செயல்திட்டத்தை தயாரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சீனா ஆகிய பல நாடுகள் முன்வந்துள்ளன.
இந்த நாடுகளின், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதற்கான போட்டியில் உள்ளன.ஆனால், ஒரு திட்டத்தை ஒரு நிறுவனத்திற்குத் தான் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள மத்திய அரசு, நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியை துவக்கியுள்ளது. அந்த வகையில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு, புல்லட் ரயில் திட்ட செயல்வடிவத்தை தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லி - சென்னை பணி துவக்கம்:
மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் சேவை தான் புல்லட் ரயில் திட்டம் எனப்படுகிறது. இதனால், இப்போதைய பயண துாரம், பாதியாகக் குறையும்.இப்போதைய நிலையில், 534 கி.மீ., நீள, மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில், அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான முன் தயாரிப்பு அறிக்கையை, ஜப்பான் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.அது போல, டில்லி - சென்னை இடையே, வைர நாற்கர ரயில்பாதை திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிக்கையை, சீன நிறுவனம் ஒன்று, பல கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது.
France,Germany Italy ,China etc Foreign countries are very much interested in the DIAMOND QUADRILATERAL BULLET TRAIN PROJECTS CONNECTING 4 METROS.
please wait...Translate to English
please wait...Translate to Hindi