Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Vivek Express - জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না - Dip

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 2200294
Posted: Mar 17 2017 (09:52)

3 Responses
Last Response: Mar 19 2017 (18:06)
General Travel
1109 views
0

Mar 17 2017 (09:52)  
livingstonsamuel~
livingstonsamuel~   529 blog posts
Entry# 2200294              
முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு தஞ்சை- திருச்சி பயணிகள் தவிப்பு
2017-03-15 10:46:41
தஞ்சை: திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டிகளை குறைத்ததால் பயணிகள் தவித்து வருகின்றனர். இதனால் பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சைக்கு 10.30 மணிக்கு வரும். தஞ்சை ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்ற பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்றடையும். அதேபோல் சென்னையிலிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 2.45 மணிக்கு தஞ்சை ரயில்வே ஸ்டேசனுக்கு வரும். 5 நிமிடத்துக்கு பின்னர் தஞ்சையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பூதலூர், தஞ்சை, கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய ரயில்வே நிலையங்களில்
...
more...
நின்று செல்கிறது. இவ்வாறு தினம்தோறும் இயங்கும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பக்கம் 2 பெட்டிகளும், பின்பக்கம் 2 பெட்டிகளும் என்று 4 பெட்டிகள் முன்
பதிவு இல்லாத இருக்கைகள் இருக்கும். சில நேரங்களில் 5 பெட்டிகள்கூட முன்பதிவு இல்லாத இருக்கைகள் இருக்கும். இதனால் திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு காலை நேரங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக பஸ்களில் பயணம் செய்யும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் பயணம் செய்வதுடன் கட்டணமும் குறைவாக இருக்கிறது.
இதனால் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பயணம் செய்யும் ஏழை பயணிகள் இந்த ரயிலை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி பெட்டிகள் குறைக்கப்பட்டதால் தினம்தோறும் இந்த ரயிலை நம்பி பயணம் செய்யும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, தினம்தோறும் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு காலை நேரத்தில் வேலைக்கு வந்து செல்கிறேன். முன்பதிவில்லாத இருக்கை பெட்டியில் அமர்ந்து வருவேன். கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிறைய பயணிகள் வர முடியவில்லை. சில நேரங்களில் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக அமையவுள்ளது. பயணிகளை காக்க வேண்டிய ரயில்வே நிர்வாகம் இப்படி உயிரை காக்க மறந்துவிட்டது. இது திருச்சியிலிருந்து தஞ்சை வரையிலான பயணம் மட்டுமே. எனவே ரயில்வே பயணிகள் நலன்கருதி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்புபோல் அதிகளவில் முன்பதிவு இல்லாத இருக்கை பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Translate to English
Translate to Hindi

1 Public Posts - Fri Mar 17, 2017

1 Public Posts - Sun Mar 19, 2017

587 views
0

Mar 19 2017 (18:06)
K.V.A.~
K.V.A.~   14718 blog posts
Re# 2200294-3              
Though i saw in irctc 3ac gets filled fr tpj cholan,but not 2ac
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy