Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Chennai EMU - என்னோட உயிர் டா நீ

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 456533
Posted: Jun 16 2012 (22:47)

7 Responses
Last Response: Jul 11 2012 (11:20)
36887 views
0
Jun 16 2012 (22:47)   06698/Villupuram - Katpadi MEMU Express Special
 
guest   0 blog posts
Entry# 456533            Tags  
this train is not cancelled
Translate to English
Translate to Hindi

1 Public Posts - Sat Jun 16, 2012

2 Public Posts - Tue Jul 10, 2012

33085 views
0

Jul 10 2012 (17:05)
duraieee   12 blog posts
Re# 456533-4              
திருக்கோயிலூர் - திருவண்ணாமலை - வேலூர் வழியாக விழுப்புரத்தில் இருந்து பெங்களூருக்கு ரயில்....
விழுப்புரம் காட்பாடி அகல ரயில் பாதை பணி முடிவடைந்து பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது அனைவரும் அறிந்ததே. ரயில் பாதையின் தரம் இன்னும் சீராக இல்லாத காரணத்தால் ரயில்களின் வேகம் குறைவாகவே இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்தது. இந்த அகல ரயில் பாதை 161KM மட்டுமே இருப்பினும், தற்பொழுது அனைத்து ரயில்களிளுமே நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
மேலும் விழுப்புரம் , திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூர் மற்றும் மைசூருக்கு பஸ் மூலம் செல்கின்றனர். மேலும் தற்போது அறிவிக்கபட்ட தாதர்- எஸ்வன்ட்புர்- பாண்டி ரயில், திங்கள்- செவ்வாய்-புதன் ஆகிய தினங்களில் மட்டுமே இயக்கப்படுவதால் வார இறுதியில்
...
more...
ஊருக்கு சென்று திரும்புவோருக்கு பயனில்லாமல் இருக்கிறது. விழுப்புரம் , திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் சென்னையை விட பெங்களூரை நோக்கி அதிக அளவில் செல்கின்றனர். ஆயினும், இது வரையில் எந்த ஒரு ரயில் போ க் குவரத்து நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
திருவண்ணாமலை - பெங்களூர் பேருந்து பயணம் செய்யும் மக்கள் தற்போது கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை நான்கு வழி சாலை பணிகள் நடைபெறுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் பஸ் கட்டண உயர்வால் அடிக்கடி தங்களது ஊருக்கு சென்று வர இயலவில்லை. பாண்டி- எஸ்வன்ட்புர் விரைவு ரயில் விருத்தாசலம், சேலம் வழியாக செல்வதால் விழுப்புரம் , திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கும் உபயோகமில்லாமல் இருக்கிறது. அந்த ரயிலும் கரீப் ராத் என்ற பெயர் கொண்டு ஏழை களுக்கு சிறிதும் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. (முற்றிலும் ஏ. சீ ரயில் அது ).
திருவண்ணாமலை திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் இருந்து இரவு நேரங்களில் சென்னையை விட பெங்களூருக்கே அதிக அளவில் பேருந்துகள் இயக்கபடுகின்றன. ஆயினும் மக்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. கர்நாடக பேருந்துகள் அனைத்தும் முற்றிலுமாக முன்பதிவு வசதியை தற்போது கொண்டு வந்துள்ளதால் ஏழை மக்களால் அதையும் பயன்படுத்த முடியவில்லை. தமிழக அரசு அறிவித்த புதிய பேருந்துகள் அனைத்துமே வெறும் முலாம் பூசி மெழுகேற்றிய பாத்திரம் போல் தரமில்லாமல் இருப்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் மக்கள் வேறு வழி இல்லாமல் இந்த பேருந்தயையே நாடவேண்டி உள்ளது. இதன் கட்டணம் ரயில் கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் தென்னக ரயில்வே வழக்கம் போல் ரயில் நிலையத்தின் தரம் சரி இல்லை, குறைந்த பணியாளர்கள், ரயில் பெட்டிகள் இல்லை என்று வழக்கம் போல் தங்களின் கதையை சொல்லி மழுப்பாமல் பொது மக்கள் நலன் கருதி விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதையை பயன்படுத்தி அவசர கால நடவடிக்கையாக தினசரி ஒரு பேசென்சேர் ரயில் பெங்களூருக்கு இயக்க முன்வர வேண்டும். அவ்வாறு இயலவில்லை என்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து பேசென்சேர் ரயில்களும் இயக்கப்பட்டால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Translate to English
Translate to Hindi

2 Public Posts - Tue Jul 10, 2012

1 Public Posts - Wed Jul 11, 2012
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy