Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Antyodaya Express: The best a common man can get. - Vikas Kumar

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1273249
Posted: Nov 11 2014 (11:07)

2 Responses
Last Response: Nov 11 2014 (22:17)
Rail News
3896 views
0

New Facilities/Technology
SR/Southern
Nov 09 2014 (08:27)   MADURAI-VIRUDHUNAGAR-KOVILPATTI-VANCHI MANIYACHI -THOOTHUKUDI / TIRUNELVELI SINGLE LINE ELECTRIFICATION READY FOR COS INSPECTION.
 

MSRINIVASANME~   1141 news posts
Entry# 1273249   News Entry# 200600         Tags   Past Edits

1 Public Posts - Tue Nov 11, 2014

2942 views
1

Nov 11 2014 (22:17)
MSRINIVASANME~   4761 blog posts
Re# 1273249-2              
திருநெல்வேலி- தூத்துக்குடி - மதுரை வழியிலான ரயில்பாதைத் திட்டத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாகவும், ரயில்வே பாதுகாப்புக் குழு அனுமதியளித்தால் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி தெரிவித்தார்.
திருநல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்தின் மேற்குப் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. 244 வீடுகள் கொண்ட இந்தக் குடியிருப்பை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி சனிக்கிழமை திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ரயில்வே ஊழியர்களுக்காக ரூ.4 கோடியில் புதிய குடியிருப்பு திறக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கொக்கிரகுளம் பகுதியில்
...
more...
அமைந்துள்ள ஆற்றைக் கடக்கும் ரயில்வே மேம்பாலத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ரூ.8 கோடியில் புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளை 9 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் குறைந்த ரயில்களே செல்வதால், தினமும் 6 மணி நேரத்துக்கு மேலாக ரயில்கள் செல்லாமல் உள்ளன.
அந்த நேரத்தில் மட்டும் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ரயில்கள் செல்லும் நேரத்துக்கு இடையூறு இல்லாமல் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரையிலான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கும், மணியாச்சியிலிருந்து தூத்துக்குடிக்கும் இடையேயான பாதையில் நடைபெற்ற மின்மயமாக்கல் பணிகளும் இப்போது முழுமையடைந்துவிட்டது. ரயில்வே பாதுகாப்புக் குழு அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
அனுமதி கிடைத்தவுடன் முதல்கட்டமாக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்படும். இதைத் தொடர்ந்து பயணிகள் ரயிலும் இயக்கப்படும். மின்சார ரயில்கள் இயக்கப்படும்போது பயண நேரம் குறையும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலைய மேலாளர் செல்லத்துரை, முதன்மைப் பொறியாளர் சாம்ஸன் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறுகையில், தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டை வழியாக மதுரை செல்லும் புதிய ரயில் வழித்தடம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரையில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy