ரயில் பயணிகளிடம் வசூல் வேட்டை: போலி டிக்கெட் பரிசோதகர் கைது
By DN, வாணியம்பாடி
First Published : 26 January 2015 04:15 AM IST
புகைப்படங்கள்
ரயில் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தியதாக போலி டிக்கெட் பரிசோதகரைப் பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸில் பொதுமக்கள் ...
more... ஒப்படைத்தனர்.
பழனியிர் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. பொதுப் பெட்டி ஒன்றில் திண்டுக்கல்லில் கைப்பந்துப் போட்டியில் கலந்து கொண்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 8 பேர் பயணம் செய்தனர்.
சேலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, மிடுக்காக உடையணிந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறி, தன்னை டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) என்று கூறிக் கொண்டார். "முதியோர் டிக்கெட்டில் பயணம் செய்வதற்கு என்ன சான்று வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்டு, "சான்று இல்லாதவர்கள் அதற்கான அபராதத் தொகையைக் கட்ட வேண்டும்' என கூறினார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விளையாட்டு வீரர்கள் டிக்கெட் பரிசோதகர் என்று கூறியவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். அவர் அணிந்திருந்த பேட்ஜில் பபஉ என்பதற்கு பதிலாக ஈஈஉ என்று இருந்ததால் சந்தேகம் வலுத்தது. எனவே பிற பயணிகள் உதவியுடன் அவரைப் பிடித்து ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாரமங்களம், சின்னப்பம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த பாபுகுமார் (29) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக போலி டிக்கெட் பரிசோதகராக நடித்து, டிக்கெட் இல்லாதவர்கள், முதியவர்களிடம் அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியதும் தெரியவந்தது.
இவர் ஏற்கெனவே இக்குற்றத்தில் ஈடுபட்டதால் ஈரோடு ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர். கடந்த டிசம்பர் 31-இல் தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், பாபு குமாரை கைது செய்தனர்.
Jokingly,i comment that he fills up the TTE vacancy.