Search Forum
Blog Entry# 1443346
Posted: Apr 26 2015 (15:50)
No Responses Yet
No Responses Yet
புதுடில்லி: ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு, சொகுசான அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள், விரைவில், நாடு தழுவிய அளவில், 50 ரயில் நிலையங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
இதுகுறித்து, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான - ஐ.ஆர்.சி.டி.சி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் நிலையங்களில், சர்வதேச தரத்தில், நவீன வசதிகளுடன் கூடிய, ஓய்வறைகள் அமைக்கும் பணி விறுவிறுப்புடன் துவங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. முழுவதும் குளிரூட்டப்பட்ட, இந்த நவீன சொகுசு ஓய்வறையில், பயணிகள் அமர சோபா, படிக்க செய்தித்தாள், பார்க்க 'டிவி' இணைய தொடர்பிற்கு வை - பை வசதி, சாமான்கள் வைக்க அலமாரி, சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும். பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப, மேற்கண்ட வசதிகள் கிடைக்கும். சோதனை அடிப்படையில், டில்லி ரயில் நிலையத்தில், ஏற்கனவே இத்தகைய வசதிகள் உடைய, நவீன ஓய்வறை செயல்பாட்டில் உள்ளது. விரைவில், மும்பை, ஹவுரா, பெங்களூரு, லக்னோ, பாட்னா, கவுகாத்தி உட்பட, 50 ரயில் நிலையங்களில், இத்தகைய ஓய்வறைகள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான - ஐ.ஆர்.சி.டி.சி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் நிலையங்களில், சர்வதேச தரத்தில், நவீன வசதிகளுடன் கூடிய, ஓய்வறைகள் அமைக்கும் பணி விறுவிறுப்புடன் துவங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. முழுவதும் குளிரூட்டப்பட்ட, இந்த நவீன சொகுசு ஓய்வறையில், பயணிகள் அமர சோபா, படிக்க செய்தித்தாள், பார்க்க 'டிவி' இணைய தொடர்பிற்கு வை - பை வசதி, சாமான்கள் வைக்க அலமாரி, சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும். பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப, மேற்கண்ட வசதிகள் கிடைக்கும். சோதனை அடிப்படையில், டில்லி ரயில் நிலையத்தில், ஏற்கனவே இத்தகைய வசதிகள் உடைய, நவீன ஓய்வறை செயல்பாட்டில் உள்ளது. விரைவில், மும்பை, ஹவுரா, பெங்களூரு, லக்னோ, பாட்னா, கவுகாத்தி உட்பட, 50 ரயில் நிலையங்களில், இத்தகைய ஓய்வறைகள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.