Search Forum
Blog Entry# 2142570
Posted: Jan 27 2017 (18:38)
No Responses Yet
No Responses Yet
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, தமிழக -கேரள எல்லை நியூ ஆரியங்காவு இடையே, வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து ரயில் இயக்கம் தொடங்க உள்ளதாக, தென்னக ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார். செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு வரை, 20 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ள நிலையில், தென்னக ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் தென்மலை, நியூ ஆரியங்காவு, ஆரியங்காவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டவாளங்களை இயந்திரம் முலம் பேக்கிங் செய்யும் பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவடையும் எனவும், அதன்பின் 2-வது வாரத்தில் செங்கோட்டை – நியூ ஆரியங்காவு தடத்தில் ரயில்கள் இயங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.