Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

The sweetest sounds in the universe - "chai chai"

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 3361676
Posted: Apr 30 2018 (07:04)

2 Responses
Last Response: Apr 30 2018 (07:13)
Rail News
38896 views
1

New/Special Trains
SR/Southern
IR Press Release
Apr 25 2018 (20:26)   INTRODUCTION OF ANTYODAYA (DAILY) EXPRESS TRAINS BETWEEN TAMBARAM – TIRUNELVELI POSTPONED

pandian   6 news posts
Entry# 3361676   News Entry# 335107         Tags   Past Edits
INTRODUCTION OF ANTYODAYA (DAILY) EXPRESS TRAINS BETWEEN TAMBARAM – TIRUNELVELI POSTPONED
Due...

37075 views
0

Apr 30 2018 (07:04)
dhanamoorthy   7 blog posts
Re# 3361676-1              
"திருநெல்வேலி அந்த்யோதயா விரைவு ரயில்: கடலூர், சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்' - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP கடிதம்
-------------------
# புதிதாக இயக்கப்படும் தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவு ரயில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களில் நின்று செல்ல வேண்டும்;
# இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் இடையே வாரந்தோறும் இயக்கப்படும் ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்.
#
...
more...
பரங்கிப்படை மார்க்கமாக சென்னை செல்லும் 15 ரயில்களில் ஒன்றையாவது பரங்கிப்படையில் நிறுத்த வேண்டும்
- என வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில் உள்ள விவரங்கள் கீழே:
--------------------
"தாம்பரம் - திருநெல்வேலி ரயில்"
தாம்பரம் - திருநெல்வேலி இடையே அந்த்யோதயா விரைவு ரயில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் தினசரி இயக்கப்படுகிறது.
முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில்கள் ஏழைகள் நலனுக்காக விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ள கடலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட இந்த ரயில் நிற்கவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் பல விரைவு ரயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் நிறுத்தப்படாமல் செல்கின்றன. ஆனால், அதே ரயில்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைந்ததும் ஒவ்வொரு சிறு ஊரிலும் நின்று செல்கின்றன. இந்த அநீதி களையப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டுக்குள்ளும் செல்லும் ரயில்கள் முக்கியமான நகரங்களில், குறிப்பாக பின் தங்கிய வடக்கு மாவட்டங்களில், நின்று செல்ல வேண்டும்.
தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவு ரயில் (16191/16192) கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களில் நின்று செல்ல வேண்டும், சிதம்பரம் நடராஜர் ஆலயம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், நெய்வேலி அனல்மின் நிலையம், கடலூர் நகரம் என பல முக்கியமான இடங்களுக்கு செல்வோருக்கு இது பெரும் பயனாக இருக்கும்.
--------------------
"இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் ரயில்"
அதே போன்று, இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் ஆகிய இரண்டு ஆன்மீக தலங்களுக்கு இடையே இயங்கும் வாரந்திர ரயில் (18495/18496) தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக தலமான சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயிலின் கால அட்டவணையை சிதம்பரத்தில் நின்று செல்லுமாறு மாற்ற வேண்டும். சைவ சமயத்தின் தலைமை இடமான சிதம்பரத்தில் இந்த ஆன்மீக நகரங்களுக்கு இடையிலான ரயில் நின்று செல்ல வேண்டும்.
--------------------
"பரங்கிப்பேட்டை ரயில் நிறுத்தம்"
மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்று பரங்கிப்பேட்டை. ஆசியாவின் முதல் இரும்பு உருக்காலை (1830) அங்குதான் நிறுவப்பட்டது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட இரும்பினைக் கொண்டுதான் எழும்பூர் ரயில் நிலையத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். தற்போது பரங்கிப்பேட்டை வழியாக சென்னை எழும்பூருக்கு சுமார் 15 ரயில்கள் செல்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு ரயில் கூட பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. இதனை மாற்றி இந்த மார்க்கத்தில் செல்லும் ஒரு ரயிலையாவது பரங்கிப்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ரயில்களை நிறுத்துவது, பின்தங்கியுள்ள இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனாக இருக்கும்; கல்வி மற்றும் சுற்றுலா நோக்கில் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்வோருக்கும் பயனாக இருக்கும்.
பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு அடிப்படை கட்டுமானங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் முதன்மையாக தேவைப்படுகின்றன. கடலூர் மாவட்டத்திற்காக புதிய வழித்தடத்தையோ புதிய ரயிலையோ கேட்கவில்லை. அந்த வழியாக ஏற்கனவே இயங்கும் ரயில்கள் முக்கியமான இடங்களில் நின்று செல்ல வேண்டும் என்றுதான் நான் கோருகிறேன்.
கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில மேற்சொன்ன மாற்றங்களை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடலூர் மாவட்ட மக்கள் இதற்காக போராட்டத்தை நடத்த முன் வந்தார்கள். நான் இந்த விவகாரத்தை தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளேன். அம்மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
- இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் தெற்கு ரயில்வே துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Translate to English
Translate to Hindi

34548 views
0

Apr 30 2018 (07:13)
guest   1704 blog posts
Re# 3361676-2              
??
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy