Search Forum
Blog Entry# 5039867
Posted: Aug 12 2021 (13:00)
No Responses Yet
No Responses Yet
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்து புதன் கிழமைகளிலும் காரைக்குடி -சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை - சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.