சென்னை: திண்டிவனம் தொழுப்பேடு இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிகள் காரணமாக, விரைவு ரயில்களின் புறப்பாடு நேரம் நாளை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 9.35 மணிக்கு பதிலாக, மணி 11.05க்கு புறப்படும். இதே போல், சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், மதியம் 1.20 மணிக்கு பதிலாக, 3.20 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - புதுச்சேரி ரயில், செங்கல்பட்டு - புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
click here