Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

इस मंज़िल पर मिलने वाले, उस मंज़िल पर दोस्त बन जाते हैं

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1112173
Posted: May 26 2014 (17:28)

1 Responses
Last Response: May 27 2014 (21:56)
General Travel
1931 views
0

May 26 2014 (17:28)  
 
vinothkumar
vinothkumar   51 blog posts
Entry# 1112173              
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தட பாதை, இரட்டை ரயில்
சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தட பாதை முழுவதும், இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டியது அவசியம் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழித்தடத்தில், ஏற்கனவே நடந்து வரும் திட்டப் பணிகளுக்கு போதிய நிதியை விடுவிப்பதுடன், ஆய்வு மேற்கொண்ட வழித்தடங்களில், இரட்டை பாதை அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் ரயில்வே பட்ஜெட்டில், இந்த திட்டம் முழுமையடைய வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.792 கி.மீ., தூரத்திற்கு...தெற்கு ரயில்வேயில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட பகுதிகளை இணைப்பது, சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம். சென்னையில் இருந்து, விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே, 792 கி.மீ., தூரத்திற்கு செல்லும் இந்த வழித்தடத்தில், இயக்கப்படும் ரயில்களின் மூலம், தெற்கு ரயில்வேக்கு வருவாய் அதிகம் கிடைக்கிறது.*இந்த வழித்தடத்தில், சென்னை - செங்கல்பட்டு; திண்டுக்கல் - மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது.*செங்கல்பட்டு - விழுப்புரம் இடையேயான, 103 கி.மீ., தூர இரட்டை ரயில் பாதைக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த
...
more...
வழித்தடத்தில், 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.*விழுப்புரம் - திண்டுக்கல் வழித்தடத்தை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற, 1,290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில், விழுப்புரம் - அரியலூர் இடையே, 50 கி.மீ., தூரத்திற்கு மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. போதிய நிதி இல்லாமல், மீதமுள்ள பணி மந்தமாகி உள்ளது.*மதுரை - திருவனந்தபுரம் வழித்தடத்தை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தை
பொறுத்தவரை, மதுரை - கன்னியாகுமரி, கன்னியா குமரி - திருவனந்தபுரம் என, இரண்டு திட்டங்களாக பிரித்து, பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
முழுமை அடையாமல்...இவற்றில், மதுரை - கன்னியாகுமரி, இரட்டை பாதை திட்டத்திற்கான ஆய்வு முடிக்கப்பட்டு, அதற்கான கருத்துருவை ரயில்வே வாரியத்திடம் சமர்பித்துள்ளனர்.இப்படி, இரட்டை ரயில் பாதை திட்டப் பணி முழுமை அடையாமல், ஆங்காங்கே, திட்டு திட்டாக நடந்து வருகின்றன. குறிப்பாக, போதிய நிதி ஒதுக்காததும், ஒதுக்கிய நிதியை முறையாக விடுவிக்காததுமே, இந்த வழித்தடம், இரட்டை ரயில் பாதையாக முழுமை அடையாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர்,இளங்கோவன் கூறியதாவது:விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்காக, முதல் கட்டமாக, 60 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து, 225 கோடி ரூபாய் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதில், 80 கோடி ரூபாய் மட்டும் விடுவிக்கப் பட்டது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே, இரட்டை ரயில் பாதைக்கு ஆய்வு முடிந்துள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.வரும் பட்ஜெட்டிலாவது, இந்த திட்டம் முழுமையடைய வழி வகுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வட மாநிலங்களில்...இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் செயலாளர், எட்வர்ட் ஜெனி கூறியதாவது:இரட்டை ரயில் பாதை திட்டம் முழுமை அடையாததால்,வட மாநிலங்களில்
Advertisement
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுக்க தவறி விட்டனர். மத்திய அரசில், 18 ஆண்டுகளாக இடம் பெற்ற தமிழககட்சிகள், இரட்டை பாதை திட்டத்திற்கு குரல் எழுப்ப தவறியுள்ளனர்.மாறாக, எம்.பி.,க்கள் சிலர், சொந்த தொகுதிக்கு ரயில் இயக்க வைப்பதிலேயே ஆர்வம் காட்டினர். வரும்பட்ஜெட்டிலாவது, இரட்டை பாதை திட்டம் முழுமையடைய தீர்வு எட்டப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பயனடையும் மாவட்டங்கள்இந்த திட்டம் முழுமையடைந்தால், இந்த வழித்தடத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்கள் நேரடி இணைப்பில் வருவதால், அம்மாவட்ட பயணிகள் பயனடைவர்.மேலும், இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களை பயன்படுத்துவர்.
திட்டம் முழுமையடைந்தால்...*சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.*தென் மாவட்டங்களுக்கான ரயில் பயணத்தில் நேர விரயம் குறையும்.*சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும்.*எரிபொருள் செலவு குறையும்.*நெருக்கடி குறைவதால், அதிக ரயில்கள் விட வாய்ப்புள்ளது.-- நமது நிருபர் -

Translate to English
Translate to Hindi

1626 views
2

May 27 2014 (21:56)
ALLTIMEGREAT~
ALLTIMEGREAT~   3351 blog posts
Re# 1112173-1              
Kya dangerous language hai...
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy