சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் ஏசி பெட்டியுடன் இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணிகளுக்கு கட்டணத்துடன் உணவும் அளிக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லக் கூடியது.
நேற்று கோவையில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது. பெட்டியில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இருந்துள்ளதை கண்டு பிடித்த ஊழியர்கள் அதை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால் முழுமையாக அதனை சரி செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
சி–1 பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய நிலையங்களில் நின்று அதனை சரி செய்து கொண்டு வந்தனர்.
இரவு...
more... 11.30 மணியளவில் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிறிது நேரத்தில் கரும் புகை திடீரென ஏற்பட்டது. சி–1, சி–2, சி–3 ஆகிய பெட்டி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பதறிய பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
ரெயில் தீப்பிடித்து எரிவதாக எண்ணி பதட்டத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில் உடனே நின்றது. 3 பெட்டிகளில் இருந்தும் பயணிகள் அபய குரல் எழுப்பியவாறு பெட்டி படுக்கைகளுடன் உயிர் பிழைத்தால் போதும் என ஓடினார்கள். ஆள்நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் நின்றதால் பெண்கள், குழந்தைகளுடன் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
சிலர் கீழே இறங்கியபோது ஜல்லி கற்களில் விழுந்து சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை தூக்கி கொண்டு பெண்கள் பதட்டத்துடன் வெளியேறினார்கள்.
சி–1 பெட்டியில் பயணம் செய்த மேட்டூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள், வக்கீல்கள் புகை சூழ்ந்த பெட்டியில் இருந்து குழந்தைகளையும், வயதான பெண்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பெரும் விபத்தில் இருந்து தப்பிய பயணிகள் அனைவரும் காட்டுப் பகுதியில் காத்து இருந்தனர். அந்த பெட்டிகளில் ஏற்பட்ட புகையை வெளியேற்றிய பிறகு தொழில் நுட்ப ஊழியர்கள் கோளாறை தற்காலிகமாக சரி செய்து ரெயிலை மெதுவாக இயக்கினார்கள்.
குறைந்த வேகத்தில் செல்வதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தி மீண்டும் பெட்டிக்குள் அனைவரையும் ஏற்றினார்கள். 10.15 மணிக்கு வரவேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.35 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்தது.
பெரும் விபத்தில் இருந்து சாப்தி ரெயில் தப்பியது. பயணிகள் உயிர் பிழைத்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
சி–1 பெட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஏதோ கோளாறு இருந்துள்ளது. அதை முழுமையாக சரி செய்யாமல் ரெயிலை தொடர்ந்து இயக்கி வந்தார்கள். பல இடங்களில் நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்தாலும் பிரச்சினை தீரவில்லை.
திருவள்ளூரை கடந்து வந்ததும் திடீரென புகை பெட்டிக்குள் சூழ்ந்ததால் ஏதோ விபரீதம் ஆகப் போகிறது என உணர்ந்து ரெயிலை நிறுத்தினார்கள். ரெயில் நின்றதும் அனைவரும் தப்பி வெளியே ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
பராமரிப்பு இல்லாமல் ரெயிலை இயக்குவதே இதற்கு காரணம் அந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.